மூதுாரில் கடலில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

திருகோணமலை, மூதூர், ஹபீப் நகர் கடலில் நீராடச்சென்ற இளைஞர்கள் மூவர், இன்று (23) பிற்பகல் 1.30 மணியளவில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். திஹாரிய கலகெடிஹேன, அலி ஜின்னா மாவத்தையைச் சேர்ந்த எம்.உகாஸ் (19 வயது) எஸ்.இக்ராம் (19 வயது) மற்றும் எம்.அப்துல்லாஹ் (16 வயது) ஆகியோரே இவ்வாறு பலியாகியுள்ளனர். மூதூர் பிரதேசத்துக்கு ஜமாஅத் போதனைக்காக வந்திருந்த நிலையிலே​யே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post