அகில இலங்கை அழகியல் நடனப் போட்டியில் மாகாண மட்டத்தில் திருகோணமலை கப்பல்துறை சரஸ்வதி வித்தியாலய மாணவர்கள் தப்பு நடனத்தில் முதலிடம் பெற்று தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.
மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியில் இடம் பெற்ற மாகாண மட்ட அழகியல் நடனத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இவர்களை நெறிப்படுத்திய நடன ஆசிரியை திருமதி. யசோதினி குகாந்தன் இவ் நடனத்தின் பாடல் ஆக்கம், இசையமைப்பு ஆசிரியர் இதயநேசன் மற்றும் வித்தியாலய அதிபர் திருமதி. தவவாசுகி ரமணன் ஆகியோரை கல்விச் சமூகம் பாராட்டியுள்ளது.