கிராமப்புற பாடசாலைக்கு ரோட்டரி கழகத்தால் கற்றல் உபகரணங்கள்

திருகோணமலை ரோட்டரி கழகத்தால் 10-10-2023 அன்று திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய கிராமப்புறப் பகுதியில் உள்ள “உப்பாறு வைஷ்ணவி வித்யாலயம்” பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு செய்தது. திருகோணமலை ரோட்டரி கழகத்தின் தலைவர் எஸ்.சௌந்தரராஜன், ரோட்டேரி கழக அங்கத்தவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் நிகழ்வை வண்ணமயப்படுத்தினர். விழாவுக்கு பாடசாலை முதல்வர் தலைமை வகித்தார். திருகோணமலை ரோட்டரி கழகத்தின் தலைவர் Rtn. எஸ்.சௌந்தரராஜன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார் ரோட்டேரி கழக அங்கத்தவர்கள் Rs. ஒரு லட்சத்து. தொண்ணூற்றாயிரம் பெறுமதியான கற்றல் உபகரணங்களை. பாடசாலையின் தரம் 1 முதல் 9 வரை உள்ள எல்லா (69) மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்கள். இந்தத் திட்டத்திற்காக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விக் மற்றும் கரேன் என்ற நலம் விரும்பிகள் அனுசரணை வழங்கினார்கள்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post