மட்டு ஊடகவியலாளரை தாக்கிய சம்பவத்திற்கு திருமலை ஊடக சங்கம் கடும் கண்டனம்

மட்டக்களப்பு கல்குடா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மது உற்பத்தி நிலையம் சம்பந்தமாக செய்தி சேகரிக்க சென்ற இரு செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியமையை திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் வன்மையாக தனது கண்டனத்தை தெரிவிக்கின்றது. இன்று 25ம் திகதி சங்கம் வெளியிட்டள்ள அறிக்கை இவ்வாறு அமைகிறது முன்னைய அரசாங்கத்தின் ஊடகம் மீதான மோசமான அடக்குமுறை இல்லது போக வேண்டும் என்றும் நல்லாட்சி ஒன்றின் தேவை அவசியம் என்ற ஒரு காலகட்டத்தில் நல்லாட்சியின் பங்குதாரர்களில் ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர். ஆனால் இன்று இந்த நல்லாட்சியிலும் ஊடகர்களை தாக்கும் சண்டியர்கள் உருவாக்கி இருப்பதுதான் இன்றுள்ள வேதனை தரத்தக்க விடயமாக உள்ளது. இன்று நாட்டில் பரவலாக போதைவஸ்து பாவனைகள் அதிகரித்திருப்பதும் போதைவஸ்து கடத்தல்கள், மாணவர்கள் போதைக்கு அடிமையாவதும் பலியாவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மட்டக்களப்பில் பொதுமக்களுக்கு எதிரான இந்த செயற்பாடுகள் அதிகாரிகளால் கண்டுகொள்ளப்படாதது ஏன் என்ற கேள்வி எழுகின்றது. இலங்கையில் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மதுசார பாவனை புகைத்தலில் தமது வருமானத்தை செலவிடுகின்றனர். சுகாதார செலவுகளில் 22 வீதத்திற்கும் அதிகமான பணம் மதுசாரம் புகைத்தல் பழக்கத்தினால் நோயுற்றவர்களுக்கு செலவு செய்யப்படுகின்றது என சுகாதார திணைக்களம் புள்ளிவிபரத்தை வெளியிடுகின்றது. அதேவேளை மாணவர்கள் போதைவஸ்து பழக்கதிற்குள் உட்பட்டு விடக்கூடாதென மேன்தகு பாடசாலை என்ற திட்டதிட்குள் பண ஒதுக்கீடு செய்து இப்போதை பழக்கங்களை இல்லாமல் செய்ய முயற்சிக்கும் வேளை மறுபுறத்தே இவ்வாறன மது உற்பத்தி நிலையங்களுக்கு சலுகை காட்டுபவர்களாக இருப்பது தான் சந்தேகம் கொள்ளச் செய்கிறது. எனவே ஊடக சுதந்திரதிட்கு குந்தகமாக செயற்படும் இந்த சண்டியர்களை அரசு கண்டும் காணாமல் விடுவது ஒரு சிறந்த நடவடிக்கையாக இருக்க முடியாது. இவை நீடிக்குமாக இருந்தால் ஊடகவியலாளர்கள் வீதிக்கு இறங்கி தங்களின் நீதியை பெற வேண்டி ஏற்படும் என திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் தெரிவிக்கின்றது

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post