காந்தி சனசமூக நிலையத்தால் பாலர் பாடசலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல்



 திருகோணமலை காந்திநகர் காந்தி சனசமூக நிலையத்தின் சார்பாக 2015 பாலர் பாடசாலையில் கல்வி பயில உள்ள மாணவர்கள்கள் 16 பேருக்கு தேவையான புத்தகப்பை தண்ணீர் போத்தல் முதல் நுால்கள் அப்பியாச கொப்பிகள் போன்ற சகல உபகரணங்களை காந்தி சனசமூக நிலையமானது தமது சொந்த நிதியில் இருந்து வழங்கி வைத்தார்கள்
 
நேற்று மாலை 25.12.2014  காந்திநகர் பாலர் பாடசாலையில் இடம் பெற்றது.இந்நிகழ்விற்கு சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் சா.முரளிதரன் மற்றும் கிராம சேவையாளர் அ.சிவானந்தம் விழுது நிறுவன உத்தியோகத்தர் வ.ராஜ்குமாா் மற்றும் சனசமூகநிலைய தலைவர் சு.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் போது சனசமூக நிலைய நுாலகத்தை பராமரித்துவரும் தொண்டர் பி.பாக்கியம் அவர்களுக்கும் பரிசில் வழங்கி கௌரவிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post