செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் வெள்ளி விழா

செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் வெள்ளி விழாவானது திருகோணமலையில் உள்ள செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவன அரங்கில் நடைபெற்றது. வெள்ளி விழாவை முன்னிட்டு கிரிக்கெட், உதைபந்தாட்டம் முதலிய பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று அதற்கான வெற்றிக் கிண்ணங்கள் இன்றைய நிகழ்வின் தலைமை விருந்தினரான திருக்கோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்களால் வழங்கி வைக்கப் பட்டன. இந்நிகழ்வின் தலைமை விருந்தினர் உரையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு குகதாசன் அவர்கள், வெளிநாடுகளில் செவிப்புலன் அற்றோர்கள் எப்படி எல்லாத் துறைகளிலும் தாங்கள் சாதித்து முன்னிலை வகிக்கின்றார்களோ அதே போன்று நமது நாட்டிலும் இவர்களை சகல துறைகளிலும் சாதிக்க உறுதுணையாக நிற்பேன் என்று கூறினார். இந்நிகழ்வினை செவிப்புலன் வழுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் காப்பாளர் பாலசுப்ரமணியம், செயளாலர் அன்றனி வியனகே, கனடாவில் உள்ள செவிப்புலன் வழுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் தலைவர் பாலநாயகம் உள்ளிட்டோரால் சிறப்பான முறையில் ஒருங்கிணைப்பு செய்யப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post