தீபச்செல்வன் எழுதிய பயங்கரவாதி நாவல் திருகோணமலையில் அறிமுக விழா..!

(சேனையூர் நிருபர்) ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய பயங்கரவாதி நாவல் அறிமுக விழா நேற்று சனிக்கிழமை (17) மாலை 3.20 மணிக்கு திருகோணமலை நகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் கவிஞர் ஓய்வு நிலை அதிபர் க . யோகானந்தன் தலைமையில் இடம் பெற்றது. நிகழ்வில் அவர் தலைமையுரை நிகழ்த்துவதையும் தொடக்கவுரையை கவிஞர் ஆசிரியர் தி . பவித்ரன் வழங்குவதையும் , நிகழ்வின் பிரதம விருந்தினர் முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி . தண்டாயுதபாணிக்கு நூல் ஆசிரியர் தீபச்செல்வன் நூலின் முதல் பிரதியை வழங்கி வெளியீட்டு வைப்பதையும் தண்டாயுதபாணி ஜயா சிறப்புரை நிகழ்த்துவதையும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தவர்களையும் காணலாம்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post