(அ . அச்சுதன்)
திருகோணமலை நகராட்சி மன்ற பொதுநூலகத்தின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வு 27.12.2023 (புதன்கிழமை) காலை திருகோணமலை நகராட்சி மன்ற மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு நகராட்சி மன்றத்தின் செயலாளர் வெ.இராஜசேகர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு, கிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களத்தின் ஆணையாளர் என்.மணிவண்ணன் கலந்து கொண்டிருந்தார்.
பல்வேறு கலை நிகழ்வுகளுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், அருவி சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றிக்கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலையில் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வு.!
bytrinco mirrer
-
0