புதனன்று மாபெரும் கவனயீர்ப்புக்கு திருமலையில் ஏற்பாடு

திருகோணமலையில் எதிர்வரும் 11.01.2017 (புதன்கிழமை) அன்று காலை 9.30 மணியளவில் உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள சட்ட உதவி மைய வளாகத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெறவுள்ளது. திருகோணமலை மாவட்ட சமூக ஆர்வலர் ஒன்றியத்தால் நடாத்தப்படவுள்ள இந்த கவனயீர்ப்பு போராட்டம் 5 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து இடம் பெறவுள்ளது. இவை வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி அதிகாரப் பகிர்வு வேண்டும் , களப்பு நீதி மன்றம் உருவாக்கப்பட்டு நீதி நிலைநாட்டப் படல் வேண்டும் , பயங்கர வாத தடைச்சட்டம் நீக்கபட்டு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், நடந்தேரிய சித்திரவதை படுகொலைகளை விசாரிப்பதற்கான விசேட பொறி முறை உருவாக்கப்பட வேண்டும் இ வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியும் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து இந்த கவனயீர்ப்பு இடம் பெறவுள்ளது என சட்ட உதவி மையத்தின் பிரதிநிதிகள் இன்று (8) ஊடகங்களுக்கு தெரிவித்தனர்..

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post