சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வும் பிரதீபா பிரபா விருது பெற்றவர்கள் கௌரவிப்பு நிகழ்வு...

திருகோணமலை அன்புவழிபுரம் டாக்டர்.ஞானசேகரம் முன்பள்ளி மற்றும் அன்புவழிபுரம் கிராம அபிவிருத்தி சங்கம் இணைந்து நடாத்திய 2014 சிறுவர் மற்றும் முதியோர் தினமும் குரு பிரதீபா விருது பெற்ற அதிபர் ஆசிரியர்களை பாராட்டும் நிகழ்வு 17.10.2014 வெள்ளிக்கிழமை காலை அன்புவழிபுரம் டாக்டர் ஞானசேகரம் முன்பள்ளி வெளியரங்கில் இடம் பெற்றது. இந்நிகழ்விற்கு கிராம உத்தியோகத்தர் மற்றும் மத குருமார்கள் சிவில் பாதுகாப்புகுழு பிரதிநிதிகள் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலைமகள் மகா வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கிராமத்தின் மூத்த பிரஜைகள் மற்றும் முன்பள்ளிஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்த கொண்டிருப்பதை படங்களில் காணலாம்

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post