நடைபெறவுள்ள 2020 பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் அஞ்சல் மூலம் வாக்குகளை செலுத்த 15200 பேர் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன இன்று 1ம் திகதி தெரிவித்தார்.
அஞ்சல் வாக்குகளை தபால் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் செயற்பாடு நேற்றைய தினம் 30ம் திகதி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றதாக இதன்போது தெரிவத்தாட்சி அலுவலர் மேலும் தெரிவித்தார்.